×

பட்டம் விடும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு: திருமங்கலம் அருகே சோகம்

 

திருமங்கலம், மே 7: திருமங்கலம் அருகே வீட்டு மாடியில் பட்டம் விடும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் அருண்குமார் (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் அருண்குமார் பட்டம் விட்டு கொண்டிருந்தார். அப்போது தடுமாறி மாடியிலேயே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

The post பட்டம் விடும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு: திருமங்கலம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Tirumangalam ,Gurunathan ,Arunkumar ,Ulagani ,
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...